சவுதிஅரேபியாவில் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த மேலும் இலங்கையர்கள் 275 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்ட காரணத்தினால் நாடு திரும்ப முடியாமல் சவுதிஅரேபியாவில் சிக்கியிருந்த மேலும் இலங்கையர்கள் 275 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் முன்னெடுகப்பட்டு வருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்