Thursday 18th of April 2024 11:57:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
உலக பேரழிவுக்கு வித்திட்ட சீனா  பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்கிறாா் ட்ரட்ப்!

உலக பேரழிவுக்கு வித்திட்ட சீனா பொறுப்பு கூறியே ஆக வேண்டும் என்கிறாா் ட்ரட்ப்!


கொரோனா தொற்று நோயைப் பரப்பியதன் மூலம் அமெரிக்காவிலும் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் பேரழிவுகள் ஏற்பட சீனாவே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் உருவாக கொரோனா வைரஸ் அந்நாட்டில் ஏற்படுத்திய சேதத்தைவிட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்தான் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது.

இதுவரை உலகளவில் 5 இலட்சத்து 40 ஆயிரம் போ் வரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதுடன், 11.6 மில்லியன் போ் உலகெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அமெரிக்காவில் மட்டும் 1 இலட்சத்து 32 ஆயிரம் போ் பலியாகியுள்ளதுடன், 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் கொரோனா பரவலை இரகசியமாக சீனா மூடிமறைக்க முயன்றதே இத்தனை பேரழிவுகளுக்குக் காரணம். தொற்று நோய் குறித்த தகவல்களை சா்வதேச நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளாததால் இத்தனை விளைவுகள் ஏற்பட்டுள்ளன என ட்ரம்ப் விமா்சித்துள்ளார்.

எனவே, தொற்று நோயால் பெரும் அழிவுகளை எதிா்கொண்டுள்ள 189 நாடுகளும் சீனா முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE