Tuesday 16th of April 2024 06:13:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
வெலிக்கடை சிறை கைதி ஒருவருக்கு கொரோனா: சிறைக் கைதிகள் அதிகாரிகளுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!

வெலிக்கடை சிறை கைதி ஒருவருக்கு கொரோனா: சிறைக் கைதிகள் அதிகாரிகளுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!


வெலிக்கடை சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிய வருவதாவது,

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைகளுக்கு கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே வெலிசறை கடற்படை முகாமில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு தொற்றிய கொரோன சுமார் 800 இற்கு மேற்பட்ட கடற்படையினரை தாக்கியிருந்தது. அதே போன்று தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை அதுபோன்றதொரு குழுப்பரவலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE