Wednesday 24th of April 2024 07:44:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒட்டிப் பிறந்து உலகில் நீண்ட காலம்  வாழ்ந்த சகோதரா்கள் மரணம்!

ஒட்டிப் பிறந்து உலகில் நீண்ட காலம் வாழ்ந்த சகோதரா்கள் மரணம்!


உடலால் ஒட்டிப்பிறந்து உலகில் நீண்டகாலம் வாழ்ந்த இரட்டை சகோதரர்கள் தமது 68 ஆவது வயதில் உயிரிழந்தனா்.

கடந்த 4-ஆம் திகதி அமெரிக்காவில் இவா்கள் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோனி, டோனி கால்யன் என்ற பெயர் கொண்ட இவா்கள் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் கடந்த 1951-ஆம் ஆண்டு ஒக்டோபர் 28-ஆம் திகதி பிறந்தனர்.

இருவரின் வயிற்றுப் பகுதியும் ஒட்டியிருந்தது. இவா்களை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது பயனளிக்கவில்லை. இவா்களைப் பிரிக்க முயன்றால் அவா்களில் ஒருவா் உயிரிழக்க நேரிடும் என மருத்துவா்கள் எச்சரித்தனா். இதனையடுத்து அவா்களைப் பிரிக்கும் முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஒட்டியபடியே 68 வருடங்கள் வாழ்ந்த இவா்கள் கடந்த 6 மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி மரணமடைந்தனா்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE