பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்டுள்ள நிலையில் அவரிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முடிவு இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ இவ்வாரம் பங்கேற்கவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தனது உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜெய்ர் போல்சனாரோ. எனினும் சுவாசப் பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை அடுத்து கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. நேற்று மட்டும் அங்கு 20 ஆயிரத்து 229 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதி செய்யப்பட்டனா்.
இவற்றுடன் மொத்த தொற்று நோயாளா் எண்ணிக்கை அங்கு 16 இலட்சத்து 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அத்துடன் நேற்று 620 பேர் கொரோனாவுக்குப் பலியான நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 65 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 9 இலட்சத்து 27 ஆயிரம் போ் குணமடைந்துள்ளனா்.
சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ, எஸ்பிரிட்டோ சாண்டோ மற்றும் மினாஸ் ஜெரெய்ஸ் ஆகிய மாநிலங்களில் தொற்று நோய் மிகத் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்