Tuesday 16th of April 2024 11:24:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தானம்!

டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தானம்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு இன்று 39 வது பிறந்தநாள். இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தின் சார்பில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை-7) காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும், கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

தமிழர் தாயகப்பரப்பில் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் அமைத்து அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டங்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக விளையாட்டு வீரரான டோனியின் ரசிகர் மன்றத்தினரால் பிறந்த நாள் நிகழ்வு முன்னெடுக்கபட்டுள்ளது.

இத்துடன் கேக் வெட்டி கழியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடாது சமூகத்திற்கு அத்தியாவசியமான இரத்த தானம் வழங்கியும் பாதிப்புற்றோருக்கு உணவு வழங்கியும் தமது அபிமானத்திற்குரியவரின் பிறந்த நாளை கொண்டாடியிருப்பது முன்மாதிரியான விடயமாகும்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE