தமிழ்நாடு சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைவடையத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கையிலும் குறைவு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று (ஜூலை-7) புதிதாக 3 ஆயிரத்து 616 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 1 இலட்சத்து 18 ஆயிரத்து 594 உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 65 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 1636 ஆக உயர்வடைந்துள்ளது.
சென்னையில் நாளாந்த தொற்று குறைவடைந்து நேற்றைய தினம் ஆயிரத்து 203 புதிய தொற்றுகள் இனம்காணப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1 ஆயிரத்து 747 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 70 ஆயிரத்து 17 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்றைய தினம் 4 ஆயிரத்து 545 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை