காற்றில் உள்ள சிறிய துகள்களால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.
கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என ஓர் உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடா்பில் மேலும் விரிவான ஆய்வுகள் தேவை எனவும் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களில் மாற்றங்களைச் செய்யவேண்டி ஏற்படும். குறிப்பாக உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும்.
ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் நுகள்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காற்று வழியாக தொற்று பரவும் வாய்ப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் குறைத்து எடைபோட்டுள்ளதாக 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை உலக சுகாதார அமைப்புக்கு அண்மையில் அனுப்பியிருந்தனா்.
'இந்த புதிய ஆதாரத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்' அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவா்களில் ஒருவரான கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளா் ஜோஸ் ஜிம்னேஷ் தெரிவித்துள்ளார்.
எங்கள் இந்த முயற்சி உலக சுகாதார நிறுவனத்தை விமா்சிப்பதற்கானதல்ல. இது ஓர் அறிவியல் விவாதம். பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால், இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்' எனவும் அவா் கூறினாா்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்