Friday 19th of April 2024 06:55:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு அலுவலகம்  ஹொங்கொங்கில் இன்று திறந்துவைக்கப்பட்டது!

சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஹொங்கொங்கில் இன்று திறந்துவைக்கப்பட்டது!


சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு அலுவலகம் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இன்று புதன்கிழமை உத்தியோகபூா்வமாக ஹொங்கொங்கில் திறந்துவைக்கப்பட்டது.

சீன அரசை விமா்சிப்போருக்குத் தண்டனை வழங்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு கூறாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங் சீனாவின் ஒரு அங்கமாக இருந்தபோதும் புதிய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னா் இவ்வாறான அலுவலகங்களை திறப்பதற்காக சட்டபூா்வ அனுமதி பீஜிங்குக்கு இருக்கவில்லை.

இந்நிலையில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு ஹொங்கொங்கில் கடும் எதிா்ப்புக்கள் இருந்தபோதும் இது ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் என சீனா அரசு சாா்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹொங்கொங்குக்கு பாதுகாப்பானது என சீனா சார்பான அதன் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று செவ்வாயன்று கூறினாா்.

புதிய பாதுகாப்பு அலுவலகம் ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் மைய புள்ளியாக இருந்த இடத்தில் உள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற புதிய அலுவலக திறப்பு விழாவில் ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் மற்றும் அலுவலகத்துக்குத் தலைமை தாங்க பீஜிங்கால் தெரிவு செய்யப்பட்ட ஜெங் யான்சியோங் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீன தேசியக் கொடி இந்த அலுவலகத்திற்கு முன்பாக ஏற்றிவைக்கப்பட்டது .

இந்த அலுவலகம் ஹொங்கொங்கின் பாதுகாப்பிற்கான தூதரகமாகவும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமையும் என ஹொங்கொங் -பீஜிங் தொடர்பு அலுவலகத்தின் தலைவரான லூவோ ஹுயினிங் கூறினாா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE