Thursday 25th of April 2024 04:13:46 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரேசிலில் நேற்று 43,305 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று!

பிரேசிலில் நேற்று 43,305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!


பிரேசிலில் நேற்று 43 ஆயிரத்து 305 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளமை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று தொற்று நோயாளா் தொகை இருமடங்காக அதிகரித்துள்ளதாக பிரேசில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

புதிய நோயாளா்களுடன் பிரேசிலில் இதுவரை 16 இலட்சத்து 68 ஆயிரத்து 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66 ஆயிரத்து 741 பேர் பலியாகி உள்ளனர். 9 இலட்சத்து 76 ஆயிரத்து 977 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோவும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE