Friday 29th of March 2024 06:17:46 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவில் 20 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்கள்!

இந்தியாவில் 20 ஆயிரத்தை கடந்தது கொரோனா மரணங்கள்!


இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 131 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 467 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 42 ஆயிரத்து 417 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 467 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 642 ஆக அதிகரித்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 2 இலட்சத்து 17 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 9 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 1636 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புது டெல்லியில் 3 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 831 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 2 இலட்சத்து 64 ஆயிரத்து 944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE