இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் நகரில் இருந்து தென்கிழக்கே 49 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 2.26 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
இந்த தகவலை இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.