Wednesday 24th of April 2024 09:23:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி வைத்தியசாலையில் விபத்து பிரிவு இல்லை -  வைத்தியர் எஸ்.மதிவாணன்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் விபத்து பிரிவு இல்லை - வைத்தியர் எஸ்.மதிவாணன்!


கிளிநொச்சி வை்ததியசாலையில் விபத்து பிரிவு இல்லாமையால் பிரச்சினைகள் உள்ளமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மயக்க மருந்து தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணர் வைத்தியர் எஸ். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி வைத்தியசாலையானது மிகவும் இன்றி அமையாத ஒன்றாகும். வடக்கு மாகாணத்திற்கான போக்குவரத்தின் பயன்பாட்டில் உள்ள ஏ9 வீதியின் மையத்திலும், நகரிலும் காணப்படுவதால் அதிகளவான விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான நிலையில் விபத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளிற்கான அனுமதிக்கப்படுபவர்களிற்கான சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு விபத்து பிரிவு என்பது அவசியமாக உள்ளது.

அவ்வாறான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான விபத்து பிரிவு உருவாக்கப்படவில்லை. அவ்வாறான நிலமையில் எம்மிடம் உள்ள வளங்களை பயன்படுத்தி சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். இங்குள்ள வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் அனைவரும் இணைந்து இவ்வாறு பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுவரும் நோயாளர்களிற்கான சிகிச்சைகளை வழங்க முடிகின்றது.

ஆனாலும் விபத்து பிரிவு ஒன்று அமைக்கப்படும் போது சிறந்த வைத்திய சேவையை வழங்க முடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE