Friday 29th of March 2024 01:37:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்து-மே.இந்திய தீவுகள் அணி வீரர்கள் மண்டியிட்டு பிளாக் லீவிஸ் மேட்டருக்கு ஆதரவு!

இங்கிலாந்து-மே.இந்திய தீவுகள் அணி வீரர்கள் மண்டியிட்டு பிளாக் லீவிஸ் மேட்டருக்கு ஆதரவு!


இங்கிலாந்து-மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆரம்பத்தில் இரு நாட்டு வீரர்களும் மண்டியிட்டு 'பிளாக் லீவிஸ் மேட்டர்' க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து 'பிளாக் லிவ்ஸ் மேட்டர்' என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இங்கிலாந்து - மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் மே.இந்திய தீவுகள் வீரர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவர், இரண்டு நடுவர்கள் மற்றும் மாற்று வீரர்கள், மைதான ஊழியர்கள் என அனைவரும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இரண்டு அணி வீரர்களும் ‘டீடயஉம டுiஎநள ஆயவவநச’ லோகா பொறித்த ரீ-சேர்ட் அணிந்து விளையாடுகின்றனர்.

நேற்று போட்டி நடைபெறும் பகுதியில் அதிகாலை முதல் பெய்த கடும் மழையால் மைதானத்தின் எல்லைகோட்டு பகுதி ஈரலிப்பாக காணப்பட்டதனால் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியிருந்தது.

இதையடுத்து ஆரம்பித்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதற்கேற்ப களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

நான்கு பந்துகளை மட்டுடே எதிர்கொண்ட நிலையில் ஓட்டமெதனையும் பெறாது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சிப்லேய் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். போட்டியின் இடையிடையே மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 17.4 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 35 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் இன்று இரண்டாவத நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE