Thursday 25th of April 2024 06:41:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8 பேருக்கு மலேரியா!

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8 பேருக்கு மலேரியா!


கொரோனா தொற்று அபாயமுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 8 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 8 பேரே மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்து;ளார்.

பெல்வெஹர தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 5 பேர் மற்றும் நீர்கொழும்பு வைக்கால பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 3 பேர் இவ்வாறு மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012 ஆண்டு முதல் இலங்கையில் எவரும் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை என்பதுடன் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பலரே மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 53 மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரே நேரத்தில் அதிகளவான மலேரியா நோயாளிகள் இனங்காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலமையயை கருத்திற் கொண்டு மலேரியா அவதானம் உள்ள நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு மேலதிகமாக மலேரியா பரிசோதனைக்கும் உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE