இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 9 பேர், பங்களாதேசில் இருந்து நாடு திரும்பிய இருவர் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 12 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1967 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 892 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை