Thursday 18th of April 2024 09:08:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவரும் கடற்படையினரது எண்ணிக்கை 11 ஆக குறைந்தது!

கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவரும் கடற்படையினரது எண்ணிக்கை 11 ஆக குறைந்தது!


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் கடற்படையினரது எண்ணிக்கை 11 ஆக குறைவடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதையடுத்து பூரணமாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 894 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலும் 11 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE