Wednesday 24th of April 2024 08:48:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் மீண்டும் கொரோனா தாக்குதல்: 59 வது நபருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் மீண்டும் கொரோனா தாக்குதல்: 59 வது நபருக்கு தொற்று உறுதி!


இலங்கையில் இன்று ஒரே நாளில் 59 வது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை மிக மிக குறைவானதாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 59 வது நபருக்கு சற்று முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கடந்த தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று நண்பகல் உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே ஈரானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதியானதாக காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2151 ஆக அதிகரித்திருந்த நிலையில் தற்போது தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் சேர்த்து அவ் எண்ணிக்கை 2152 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளைஇ 894 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE