Thursday 28th of March 2024 04:40:29 PM GMT

LANGUAGE - TAMIL
.
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!


கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இனம்காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றிய அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE