கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று 338 பேருக்கு கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையயத்தில் இருந்த 338 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 196 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த முகாமில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 57 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை தெரிந்ததே. இதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு பெண் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டமையால் சமூகத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை