அமெரிக்காவில் நேற்று இரண்டாவது நாளாகவும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று நோயாளா்கள் பதிவாகியுள்ளனா்.
நேற்று 60 ஆயிரத்து 565 புதிய தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை பதிவான அதிக தொற்று நோயாளா் தொகை இதுவாகும்.
நேற்று முன்தினம் புதன்கிழமை புதிய தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 60,541 ஆக பதிவாகியிருந்தது.
இதேவேளை, அமெரிக்காவில் தொடர்ச்சியாக நேற்று மூன்றாவது நாளாகவும் கொரோனா மரணங்கள் 800 –ஐ கடந்து பதிவாகின.
புளோரிடாவில் 120 இறப்புகளும் கலிபோர்னியாவில் 136 புதிய இறப்புகளும் நேற்று பதிவாகியுள்ளன.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களுக்கு வெளியேயும் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அலபாமா, மொன்டானா மற்றும் விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை சாதனை மட்டத்துக்கு அதிகரித்தது.
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 41 மாநிலங்களில் தொற்று நோயாளா் தொகை அதிகரித்து வருகின்றது.
அமெரிக்காவில் இதுவரை 31 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதுடன், 133,000 -க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா