பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்ஜீவ இன்று கொழும்பு மேல் நீதிமன்ற, வளாகத்தில் செய்தியாளர் ஒருவரை அச்சுறுத்தி இழுத்துச் சென்று நீதிமன்ற பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தான் செய்தியாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய போது இவ்வாறு பொலிஸ் பரிசோதகர் செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சாவடியில் வைத்து தனது கெமராவில் இருந்த மெமரி சிப்யினை {memory chip } கெமராவில் இருந்து எடுத்து கொண்டதாக செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பொலிஸ் போதை பொருள் பிரிவு பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்