கொரோனா தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்த் தொடங்கியுள்ள நிலையில் நாட்டில் தேவையற்ற பதற்றங்களை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தொற்றாளர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருப்பதாக வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை