Thursday 25th of April 2024 01:57:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா 2-வது அலை எதிரொலி: வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தபடுகிறது!

கொரோனா 2-வது அலை எதிரொலி: வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தபடுகிறது!


இலங்கையில் திடீரென அதிகரித்திருக்கும் கொரோனா தொற்று எதிரொலியாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனாn தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையரிகளில் இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE