Tuesday 23rd of April 2024 04:32:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவிலிருந்து படகில் இலங்கை வந்த நால்வர் கடற்படையினரிடம் சிக்கினர்!

இந்தியாவிலிருந்து படகில் இலங்கை வந்த நால்வர் கடற்படையினரிடம் சிக்கினர்!


படகு ஒன்றில் இலங்கை வந்துகொண்டிருந்த நால்வரை நடுக்கடலில் வைத்து கைது செய்ததாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கடந்த இரவு அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் இருவர் இலங்கையிலிருந்து படகுடன் தமிழகம் சென்று திரும்பியவர்கள் என்றும் ஏனைய இருவரும் இந்தியாவில அகதிகளாக வாழ்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கைதானவர்களில் ஒருவர் 19 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றவர் என்றும் மற்றையர் அண்மையில் சென்றவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்களிடம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணை இடம்பெற்றுவருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் சடுதியாக அதிகரித்துவரும் கொரோனா குறித்த நபர்களையும் தொற்றியிருக்கலாம் என்ற காரணத்தினால் அவர்கள் தனிமைப்படுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாக தெரியவருகிறது.

இதேவேளை இன்று அதிகாலை ஒரு தொகுதி போதைப்பொருட் பொதிகள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது படகில் போதைப் பொருட்களை ஏற்றிவந்த படகு அவற்றை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் போதைப் பொருட்களை ஒப்படைத்த கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE