கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இறுதியாக தொற்று உறுதியான ஒரு ஊழியருடன் தொடர்புடைய 300 பேர் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இறுதியாக தொற்று உறுதியான3 தொற்றாளர்களில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட ஒருவரும் உள்ளடங்கியிருந்தார்.
ராஜாங்கணை பிரதேசத்தை சேர்ந்த இவருடன் நெருக்கமாக பழகியவர்கள் என்ற அடிப்படையில் இனம் காணப்பட்ட 70 சிறுவர்கள் உள்ளிட்ட 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்விடயத்தை தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை