Wednesday 24th of April 2024 07:24:28 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்று குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சவேந்திர சில்வா கோரிக்கை!

கொரோனா தொற்று குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சவேந்திர சில்வா கோரிக்கை!


கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தௌிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE