Friday 19th of April 2024 09:25:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
தொற்று உறுதியான கந்தகாடு ஆலோசகரது 2 மகள்மாருக்கும் கொரோனா: சக மாணவர்கள் பலர் தனிமைப்படுத்தலில்!

தொற்று உறுதியான கந்தகாடு ஆலோசகரது 2 மகள்மாருக்கும் கொரோனா: சக மாணவர்கள் பலர் தனிமைப்படுத்தலில்!


கொரோனா தொற்று உறுதியான கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றியவரின் 2 மகள்மாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுடன் கல்வி வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் பலர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் ராஜாங்கணை பிரதேசத்தை சேர்ந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் மற்றுமொரு ஆலோசகருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவரது இரு மகள்களுக்கும் தொற்று பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 11 வயதான மூத்த மகள் சென்று வந்த கல்வி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தொற்று உறுதியான ஆலோசகருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய 70 சிறுவர்கள் உள்ளிட்ட 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE