யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட 114 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவரை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்து உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருளை இரண்டு துவிச்சக்கர வண்டிகளில் எடுத்துச் சென்ற 114 கிலோ கேரள கஞ்சா, வட்டுக்கோட்டை பொலிசாரின் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை எடுத்துச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடல் மார்க்கமாக கடத்திவரப்படும் கேரள கஞ்சா போதைப்பொருள் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட வகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டுவந்த நிலையில் பொலிசாரை ஏமாற்றி கண்காணிப்பில் இருந்து தப்பித்து கொண்டு போய்விடலாம் என்ற எண்ணத்தில் மாற்றி யோசித்த கடத்தல் காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்