Thursday 25th of April 2024 11:41:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
கந்தகாடு: கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கும் கொரோனா!

கந்தகாடு: கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கும் கொரோனா!


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றி வந்த திருகோணமலை மாவட்டம் கந்தளாயை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்த இராணுவ வீரரொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம் நேற்று (ஜூலை-12) அறிவித்துள்ளது.

குறித்த இராணுவ வீரர் கந்தகாடு இராணுவ நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுகாதார வைத்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய யு.கே சமிந்த குமார என்ற குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் தனது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதே கொரோனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது.

இராணுவ சிப்பாய் தொடர்புகளை பேணிய, அவர் சென்ற இடங்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE