Thursday 18th of April 2024 07:58:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவில் தொடரும் கடும் மழையால்  இரு மாகாணங்களில் அபாய எச்சரிக்கை!

சீனாவில் தொடரும் கடும் மழையால் இரு மாகாணங்களில் அபாய எச்சரிக்கை!


சீனாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவரும் நிலையில் மழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணங்களான ஜியாங்சு மற்றும் ஜியாங்சி ஆகிய மாகாணங்களி்ல் அபாய எச்சரிக்கை நேற்று ஞாயி்ற்றுக்கிழமை இரண்டாவது உயா் ஆபத்து மட்டத்துக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

ஜியாங்சியின் போயாங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரியின் நீர்மட்டம் 74 அடியாக உயா்ந்துள்ளது.

இந்தப் பகுதிகளில் மீட்புப் பணி்க்காக இராணுவத்தினா் அனுப்பப்பட்டுள்ளனர்.

சீனாவில் இந்த ஆண்டு இதுவரை, வெள்ளத்தினால் சுமார் 141 பேர் இறந்துள்ளனா். அல்லது காணாமல் போயுள்ளனர். மழை-வெள்ளப்பெருக்கால் 3.53 மில்லியன் ஹெக்டேர் (8.72 மில்லியன் ஏக்கர்) விவசாய நிலங்கள் அழிந்துள்ளன. 28,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் மொத்தம் 82.23 பில்லியன் யுவான் (11.75 பில்லியன் டொலர்) என மதிப்பிடப்பட்டுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சீன நீர்வள அமைச்சின் கூற்றுப்படி ஜூலை ஆரம்பத்தில் இருந்து 212 ஆறுகள் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளன. அவற்றில் 19 ஆறுகள் வரலாற்று சாதனை மட்டத்துக்கு உயர்ந்துள்ளன.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE