Friday 19th of April 2024 08:05:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவிலிருந்து தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்கு சென்ற வேட்பாளரின் வாகனம் விபத்து!

வவுனியாவிலிருந்து தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்கு சென்ற வேட்பாளரின் வாகனம் விபத்து!


வவுனியாவிலிருந்து தேர்தல் பரப்பரைக்கூட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று (12) இரவு வவுனியா திரும்பிய வாகனம் வீதியிலிருந்த மாடு திடீரென்று வீதியைவிட்டு பாய்ந்து சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதில் வாகனத்தில் பயணித்த இரு வேட்பாளர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இன்று காலை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவில் மக்கள் சந்திப்புக்களை நடாத்திவிட்டு இரவு கிளிநொச்சி ஊடாக வவுனியாவிற்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது பரந்தன் ஏ 35 வீதியில் மாடுகள் வீதியில் நடந்து சென்றபோது திடிரென்று சில மாடுகள் வீதியின் நடுப்பகுதிக்கு சென்றபோது வேட்பாளர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்த இரு வேட்பாளர்களும் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர் .

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE