வவுனியாவிலிருந்து தேர்தல் பரப்பரைக்கூட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று (12) இரவு வவுனியா திரும்பிய வாகனம் வீதியிலிருந்த மாடு திடீரென்று வீதியைவிட்டு பாய்ந்து சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதில் வாகனத்தில் பயணித்த இரு வேட்பாளர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
இன்று காலை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவில் மக்கள் சந்திப்புக்களை நடாத்திவிட்டு இரவு கிளிநொச்சி ஊடாக வவுனியாவிற்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது பரந்தன் ஏ 35 வீதியில் மாடுகள் வீதியில் நடந்து சென்றபோது திடிரென்று சில மாடுகள் வீதியின் நடுப்பகுதிக்கு சென்றபோது வேட்பாளர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்த இரு வேட்பாளர்களும் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர் .
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா