நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட இறுதிவருட மாணவர்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக நிர்வாக பீடம் குறித்த தீர்மானத்தினை எடுத்து ஊடகங்களுக்கு அறிவித்திருக்கின்றது.
மாணவி ஒருவருக்கு கொரோனா சந்தேகம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.