Saturday 20th of April 2024 07:52:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மேலும் 5 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓமான் நாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்களில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இராஜாங்கணை மற்றும் பொலன்னறுவை லங்காபுர பிரதேசங்களை சேர்ந்த மேலும் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2651 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலம் 7 பேர் இன்று குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளவர்களது எண்ணிக்கை 1988 பேராக உயர்வடைந்துள்ளது.ர அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 652 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE