நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்-2020 குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளர் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தேர்தல் காலத்தினுள் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளை ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் கண்காணிப்பங்கள் சில தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சிறுவர்கள் தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்படும் காணொளிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றின் ஊடாக அவர்களின் ஆளுமை வளர்ச்சி, மன நிலை, அடையாளம் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை நிறுத்துமாறு அனைவருக்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை