கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்நதவர்களில் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தைச் சேர்நதவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் அங்கு உள்ள கைதிகளில் 444 பேருக்கும் பணிக்குழாமைச் சேர்ந்த 64 பேருக்கும் கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு திரும்பிய கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கந்தகாடு முகாம் கொரோனா வலையமாக மாற்றமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை