முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகிறார்.
எதிர்வரும் வியாழக்கிழமை(23) மாலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மதகுருமார்கள் , கல்வியாளர்களுடன் சந்திப்பினையும் மேற்கொள்ளவுள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்