சுவிட்டசர்லாந்து நாட்டின் சூபிகோன் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பில் சற்று முன்னர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தலைநகர் சூரிச் இற்கு அருகாமையில் உள்ள சூபிகோன் பிராந்தியத்தில் உள்ளுர் நேரம் அதிகாலை 3.00 மணியளவில் திடீரென குறித்த குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அருகில் உள்ள ஈழத்தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு அறிவித்ததை அடுத்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வேளை குறித்த குடியிருப்பில் வயோதிபர் ஒருவரே குடியிருந்ததாகவும் அவரது நிலை என்ன என்று தெரியாதுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல் மூலம் அறியமுடிகிறது.
Category: உலகம், புதிது
Tags: சுவிட்சர்லாந்து