லண்டன் - ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் இந்தத் தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு அம்சங்களைக் கெண்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸக்கு தடுப்பூசி கட்டறியும் ஆய்வுகளில் உலக நாடுகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வரும் தடுப்பூசி ஏனைய நாடுகளை விட சிறப்பான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் அரசின் உதவியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஜென்னர் பயிற்சி மையம், அஸ்டரா ஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.
இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் தடுப்பூசியில், இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக இந்த ஊசியை செலுத்தும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இரண்டாவதாக, மனித உடலில் வைரசை உருவாக்கும் 'செல்'களை அழிக்கும். 'கில்லர் டி செல்' என்ற செல்லும் இதில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை செலுத்தும் நபருக்கு, ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி செல் என்பது அவரது உடலில் பல ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் என்பது மிகவும் சாதகமான அம்சமாகும்.
இந்த தடுப்பூசி குறித்து இன்னும் பல நீண்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், தற்போதைக்கு இந்த ஆராய்ச்சி சரியான திசையில் செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் இந்தத் தடுப்பூசி எப்போது பாவனைக்குத் தயாராகும் என உறுதியாக இப்போது கூற முடியாது என இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்க அனுமதி அளித்த, ஆராய்ச்சி நெறிமுறை குழு தலைவர் டேவிட் கார்பென்டர் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் ஆராய்ச்சியின் முடிவுகள் தவறாக கூட போகலாம். இருந்தாலும், மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், வரும் செப்டம்பரில் இந்த ஊசி, பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது எனவும் அவா் கூறியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து