தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் என்றுமில்லாதவாறு அதிக தொற்றும் மரணமும் நிகழ்ந்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் புதிதாக 4 ஆயிரத்து 807 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொதத்த தொற்று 1 இலட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்று 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றும் ஆயிரத்து 219 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 84 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 13 ஆயிரத்து 856 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 49 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை