வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தின் போது அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்க செய்வதற்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு பணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை நல்லூர் உற்சவத்தின்போது 50க்கும் குறைவான பக்தர்களை உட்பிரவேசிக்க அனுமதிக்க முடியும் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது
இருப்பினும் குறித்த ஆலயத்தின் சிறப்பினை கருதி, உற்சவ காலத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்கும் அதே நேரம், சுகாதார அறிவுறுத்தல்களையும் பின்பற்றும் வகையிலான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்