பெர்னின் புகலிட மையங்களில் மோசமான நிலைமைகளைக் கண்டித்தும் அவற்றைச் சீரமைக்குமாறு கோரியும் சுவிட்சர்லாந்து பாராளுமன்ற கட்டடத்தின் முன் புகலிடக் கோரிக்கையாளா் ஒருவா் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.
அனைவருக்கும் சமமான மருத்துவ சிகிச்சை, புகலிடம் கோருவோர் அங்கு வேலை செய்வதற்கான உரிமை, புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிட மையங்களில் தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவற்றைக் கண்டித்து சுவிஸ் பாராளுமன்றக் கட்டத்தின் முன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
போராட்டத்தில் பங்கேற்ற புகலிடக் கோரிக்கையாளா் ஒருவா் தனக்குத் தானே தீவைத்தவாறு பாராளுமன்ற சதுக்கத்தில் ஓடும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.
தன்னைத் தானே தீவைத்துக்கொண்ட நபா் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளா் என தெரியவந்துள்ளது. அந்த நபா் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
சுவி்ற்சா்லாந்து - பெர்னில் புதிய புகலிட மையங்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகள் போன்றவை என அங்கு நேற்று எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தவா்கள் குற்றஞ்சாட்டினர்.
Category: உலகம், புதிது
Tags: சுவிட்சர்லாந்து