Tuesday 23rd of April 2024 11:27:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
கருணாவைக் கைது செய்யக் கோரி தாக்தல் செய்த  மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிப்பு!

கருணாவைக் கைது செய்யக் கோரி தாக்தல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிப்பு!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதம் கிழக்கில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கருணா ஆனையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 வரையான படையினரை தான் கொன்றதாகவும் எனவே, கொரோனாவை விட தான் ஆபத்தானவர் எனவும் தெரிவித்திருந்தைமை பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

இந்நிலையில் கருணாவின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி கடுவல நகர சபை உறுப்பினா் போசத் கலஹேன பதிரண மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் உட்பட பல நபர்கள் கருணாவைக் கைது விசாரி்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

கருணாவின் இந்தக் கருத்துத் தொடா்பில் குற்றப் புலாய்வுத் துறையினரால் அவரிடம் 7 மணி நேரங்கள் வாக்குமூலம் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE