Tuesday 16th of April 2024 03:58:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் புதிதாக 5 ஆயிரத்தை நெருங்கிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.

சற்று முன்னதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்பயைடில் இன்று தமிழ்நாட்டில் புதிதாக 4 ஆயிரத்து 905 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர். இதையடுத்து மொதத்த தொற்று 1 இலட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்று 75 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்து 130 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 88 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 51 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE