Friday 19th of April 2024 07:27:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
கடலட்டை பிடிப்பதை தடை செய்யக்கோரும் மனு ஒத்திவைக்கப்பட்டது! சட்டத்தரணி சுமந்திரன் (காணொளி)

கடலட்டை பிடிப்பதை தடை செய்யக்கோரும் மனு ஒத்திவைக்கப்பட்டது! சட்டத்தரணி சுமந்திரன் (காணொளி)


வெளிமாவட்டங்களிலிருந்து வந்து கடலட்டை பிடித்தல் என்ற பெயரில் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடலட்டை பிடிப்பதை தடுக்கக்கோரும் மனு கடந்த ஆண்டும் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடை கட்டளையை அறிவித்த நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இருந்தபோதிலும் பருவகாலம் முடிவடைந்ததால் கட்டளையை புதுப்பிக்கும் நடவடிக்கையினை வழக்குத் தாக்கல் செய்திருந்தவர்கள் கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடலட்டை பிடிப்பதான அனுமதியுடன் வடமராட்சி கிழக்கில் தங்கியிருக்கின்ற வெளி மாவட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் இங்குள்ள மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து கடந்த ஆண்டு கடலட்டை பிடிப்பதற்கான தடை கட்டளையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் வாதிட்டார்.

இது குறித்த விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் முன்னிலையாகியிருந்த சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE