Saturday 20th of April 2024 07:33:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்டது கொரோனா: ஒரே நாளில் 6 ஆயிரத்தை நெருங்கியது!

தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்டது கொரோனா: ஒரே நாளில் 6 ஆயிரத்தை நெருங்கியது!


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுமீறிய நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதன் வெளிப்பாடாக தமிழ்நாட்டில் இன்றைய ஒரே நாளில் 6 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பதிவாகியுள்ளது.

சற்று முன்னதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்பயைடில் இன்று (ஜூலை-22) தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 849 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதன் மூலம் முதன் முறையாக ஆறாயிரத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து மொதத்த தொற்று 1 இலட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்று 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்து 171 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 89 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 51 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE