Tuesday 23rd of April 2024 10:37:01 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் மீனவர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்!

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் மீனவர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்!


மீனவர் விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியுடன் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருக்கின்ற மீனவர்கள் அத்து மீறிய சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பிலான கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் தற்போது நடைபெறுகிறது.

குறித்த கலந்துரையாடலில் மீன்பிடி துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தேர்தல்கள் கண்காணிப்பு குழுவினர் முன்னிலையில் நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE