Friday 29th of March 2024 05:36:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 2 இலட்சத்தை தொட்டது கொரோனா தொற்று: ஒரு நாளில் அதிகூடிய தொற்று பதிவாகிது!

தமிழ்நாட்டில் 2 இலட்சத்தை தொட்டது கொரோனா தொற்று: ஒரு நாளில் அதிகூடிய தொற்று பதிவாகிது!


தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 2 இலட்சத்தை தொட்டுள்ளது.

சற்று முன்னதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்பயைடில் இன்று (ஜூலை-24) தமிழ்நாட்டில் புதிதாக 6 ஆயிரத்து 785 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதன் மூலம் இரண்டாவது நாளாக ஆறாயிரத்தை கடந்த தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொதத்த தொற்று 1 இலட்சத்து 99 ஆயிரத்து 749 ஆக உயர்வடைந்து 2 இலட்சத்தை தொட்டுள்ளது.

இதேவேளை இன்று 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்து 299 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 92 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 53 ஆயிரத்து 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE