Friday 29th of March 2024 01:06:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!

வவுனியாவில் தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!


83ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, யெகன் ஆகியோரின் நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழவிடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் முக்கியஸ்தர் விஐயகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் குட்டிமணி தங்கத்துரை,யெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் உபதலைவர் கென்றி மகேந்திரன், துணை மாவட்ட அமைப்பாளர் நாகராயன், பிரதேசசபை உறுப்பினர்களான பூ.சந்திரபத்மன்,கார்தி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE