Friday 29th of March 2024 07:27:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐ.டி.எச். கொரோனா தொற்றாளர் வழித்தடம் அறிவதில் தொடரும் சிக்கல்: போலியான தகவல்களை வழங்கியுள்ளதால் குழப்பம்!

ஐ.டி.எச். கொரோனா தொற்றாளர் வழித்தடம் அறிவதில் தொடரும் சிக்கல்: போலியான தகவல்களை வழங்கியுள்ளதால் குழப்பம்!


அங்கொடை வைத்திய சாலையில் இருந்து தப்பித்துச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றாளரது வழித்தடம் அறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

நேற்றைய தினம் அதிகாலை 2.00 மணிக்கு அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பித்திருந்த கொரோனா தொற்றாளர் சுமார் 9 மணித்தியாலங்களின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவில் வைத்து இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர் புறக்கோட்டையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் சென்றிருந்ததை தவிர வேறு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அவரது வழித்தடம் அறியும் நடவடிக்கைகள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வழங்கப்பட்டிருந்த பயண வழித்தடம் குறித்த தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவத்தள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE